அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் பூச்செரிதல் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

395

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் பூச்செரிதல் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோவில் பூச்செரிதல் விழா.

அறந்தாங்கியில் அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோவில் ஆடித்திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது அதன் முக்கிய நிகழ்வுகளாக பூச்செரிதல் விழா அம்மனுக்கு வர்த்தக சங்கம் சார்பில் அறந்தாங்கி நகர தலைவர் எஸ்.காமராஜ் தலைமை யில். தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர்.வீ.கோவிந்தராஜீலு, மாநில பொருளாளர். சதக்கத்துல்லா, மற்றும் அறந்தாங்கி நகரவர்த்தகர்கள் யானை முன்செல்ல ஊர்வலமாக வர்த்தக வியாபாரிகள் பூத்தட்டுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து சாமிக்கு செலுத்தினர் இதேபோல் ஆட்டோ, லாரி மற்றும் 30 மண்டக படிதாரர்கள் என ஏராளமானவர்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தி சாமி தரிசனம். செய்தனர்


பாதுகாப்பு பணியில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்