புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் 60க்கும் மேற்பட்ட போலீசார் 2மணி நேரமாக சோதனை

857



புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட சிறைச்சாலை மற்றும் பார்ஸ்டல் பள்ளி உள்ளது. இங்கு 450-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.


இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின்பேரில் இன்று காலையில் புதுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் பொறுப்பு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்,மாறன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்பநாய் உதவியுடன் மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரம் அப்போது போலீசார் கைதிகளின் ஒவ்வொரு அறையாக சென்று, அங்கு தீவிர சோதனை நடத்தினார்கள். குளிக்கும் அறை, கழிவறைகள் போன்றவற்றிற்கும் சென்று, போலீசார் சோதனை நடத்தினார்கள். சிறையில் உள்ள கைதிகளிடம் செல்போன்கள், போதை பொருட்கள், ஆயுதங்கள் போன்ற பொருட்கள் உள்ளதா? என போலீசார் சோதனை நடத்தினார்கள். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த சோதனையில் எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது