IPL 2023 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை அணி…

383

மாஸ்.. சென்னை அணி அபார வெற்றி.. குஷியில் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட பிளேஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கிய நிலையில், முதல் தகுதிச்சுற்றில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே 23) சென்னை-குஜராத் அணிகள் மோதும் பிளே ஆப் போட்டி நடக்கிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதனால், முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்துள்ளது.

இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது

*IPL 2023 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை அணி…*

*இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது…*

*இந்த வெற்றியால் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்…*

*10″வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி*

*14 Season*
*12 Play Offs*
*10 Final*
*4 Time Trophy Win*