நடு வானில் தன் இருக்கைக்கு அடியில் நாகப்பாம்பை கண்ட விமானி‼️

137

தென்னாபிரிக்காவை சேர்ந்த விமானியான ருடால்ப் எராஸ்மஸ் என்பவர், நான்கு பயணிகளுடன் ஒரு சிறிய விமானத்தில் வொர்செஸ்டரில் இருந்து நெல்ஸ்ப்ரூட் வரை சென்று கொண்டிருந்தார்.

நடுவானில் 11 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் சென்றுக்கொண்டிருந்தபோது, அவரின் இருக்கைக்கு அடியில் ஒரு நாகப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பதற்றம் கொள்ளாமல் விமானத்தை சீராக இயக்கியுள்ளார்.

அத்துடன், சக பயணிகளிடம் விமானத்தின் உள்ளே பாம்பு உள்ளது. அது என் இருக்கைக்கு அடியில் இருப்பதை உணர்ந்தேன். எனவே விமானத்தை விரைவில் தரையிறக்க வேண்டும் என கூறினார்.

பின்னர் அவர் ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்புக்கொண்டு சூழ்நிலையை விளக்கி விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.

தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் சக பயணிகளை காப்பாற்றிய விமானியை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.