புதுக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் வணிகர் சங்கங்கள் பற்றிய 10ஆம் நூற்றாண்டு கல்வெட்டு..

738

புதுக்கோட்டை மாவட்டம்
இலுப்பூர் தாலுக்காவிலுள்ள
தன்னாங்குடி கிராமம் அருகேயுள்ள ஊர் பிலிப்பட்டி,இவ்வூரில் உள்ள ஓர் தனியார் வயலில்,ஒரு கல் நடப்பட்டு இருந்தது,

இக்கல்வெட்டு சோழப்பேரரசனான உத்தமசோழனின் 14 ம் ஆண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது, இக்கல்வெட்டின் முன்புறம் வணிகக்குழுவினர் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பிற்கு வரும் காவல் குடியினரின் சின்னங்களான, திரிசூலம்,அரிவாள்,குத்துவாள்,வளரி,அங்குசம்,சிவிகை, வெண்குடை, கோடரி,குத்துவிளக்கு போன்ற சின்னங்கள் இடம்பெற்றுள்ளது. பலவகை குழுக்கள் ஒன்றிணைந்து வணிகம் நடத்தியிருப்பதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.

கல்வெட்டு தகவல்கள் :

உத்தமசோழனின் பதினான்காவது ஆட்சியாண்டில் அதாவது கி.பி.984ல் இக்கல்வெட்டு வெட்டப்படுகிறது. இதில் ஐந்நூற்றுவர்,வளஞ்சியர் போன்ற வணிகக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுக்கள் சோழர்காலத்தில் தென்னிந்தியா முழுவதும் வணிகம் செய்த மிகப்பெரிய வணிகக்குழுவினர் ஆவர்.இதில் மங்களநாட்டு ஐநூற்றுவர் (இன்றைய திருவாரூர் அருகேயுள்ள பகுதி)புறமலைநாட்டு(இன்றைய தர்மபுரி பகுதி)ஐநூற்றுவர்,பூங்குன்ற நாட்டு ஐநூற்றுவர்(இன்றைய சிவகங்கை அருகேயுள்ள பகுதி),மணலூர்(இன்றைய காங்கேயம் அருகேயுள்ள பகுதி)நாட்டு ஐநூற்றுவர்,கொடும்பாளூர் வீரப்பட்டின ஐநூற்றுவர்,மற்றும் வளஞ்சியர் எனும் வணிகக்குழுவினர் இணைந்து வணிகம் செய்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.

இதில் வரும் புதுக்கோட்டை கொடும்பாளூர் ஐநூற்றுவர் குழு, கொடும்பாளூர் அருகேயுள்ள ஒரு ஊருணியில் உள்ள மடைத்தூணை சீரமைத்ததை அங்குள்ள கல்வெட்டு சான்றளிக்கிறது. தொடர்ந்து ஐநூறு ஆண்டுகள் அக்குழு இயங்கிவந்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்குழுவினருக்கு பகையாய் உள்ளவர்களின் வம்ஸம் குறித்து வசைசொற்களை கூறுவதாய் இறுதிபகுதி அமைந்துள்ளது. கல்வெட்டு சிதைந்துள்ளதன் காரணமாய் முழுவதும் தகவலை அறியமுடியவில்லை.

தமிழகத்தின் சேர,சோழ,கொங்கு,பாண்டிய,தகடூர், ஆகிய தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மண்டல வணிகக்குழுக்களும் ஒன்றிணைந்து இருந்ததை இக்கல்வெட்டு வாயிலாய் அறிய முடிகிறது.