ஆவணி அவிட்டம் !!!

340

துன்பம் விலகி… வீட்டில் ஆனந்தம் பொங்க வைக்கும் ஆவணி அவிட்டம் வழிபடு!

ஆவணி அவிட்டம் இந்தாண்டு 2022 ஆகஸ்ட் 11ம் தேதி (வியாழன்) ஆடி 26 அன்று கடைப்பிடிக்கப் படுகிறது.

ஆவணி அவிட்டத்தன்று பூணூல் மாற்றும் சடங்கு மட்டுமின்றி கல்வியைக் கற்கவும், கற்பிப்பதைப் போற்றக்கூடிய விழா தான் ஆவணி அவிட்டம்.ஆவணி அவிட்டம் விரத நியமங்களை முறையாகக் கடைப்பிடித்து பூணூல் அணிந்து கொண்டால் அவருக்கு உபாகர்ம வினைச் செய்வது உலக நன்மைக்கு வழிவகுக்கும்.



ஆவணி அவிட்டம் அன்று காயத்ரி மந்திரம் உச்சரித்து பூணூல் மாற்றுவது வழக்கம். எல்லா தெய்வ மந்திரத்திற்கும் தலையாய மந்திரம் காயத்ரி மந்திரம் உள்ளது.

ஆவணி அவிட்டம் அன்று கல்வி தொடங்குவதற்கான ‘உபாகர்மா’ என சொல்லப்படுகிறது.

சந்திரனை அடிப்படையாக கொண்ட ஸ்ராவண மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது.

அதாவது ஆடி அமாவாசை முதல் ஆவணி அமாவாசை வரையிலான காலம் ஸ்ராவண மாதமாகும். இந்த மாதத்தில் வரக்கூடிய அவிட்ட நட்சத்திர நாளில் அல்லது பெளர்ணமி திதியில் ஓர் ஆண்டுக்கான கல்வி தொடங்குகிறது.



ஆவணி அவிட்டம் ஸ்ராவண மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி அன்று கடைப்பிடிக்கப் படுகிறது. ஸ்ராவண மாதம் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் மாதமாகும். அந்த வகையில் இந்தாண்டு ஆகஸ்ட் 11ம் தேதி ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமி திதியிலேயே கடைப்பிடிக்கப்படுகிறது.
மேலும் ரிக், யசுர்வேதிகள் கொண்டாடும் நாளாகும்.

ஆவணி அவிட்டம் என்றதும் பூணூல் மாற்றும் நிகழ்வு தான் நினைவுக்கு வரும். இந்த பூணல் மாற்று நிகழ்வின் போது காயத்திரி மந்திரம் உச்சரிப்பது வழக்கம்.
மிக சக்தி வாய்ந்த காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும்



காயத்திரி மந்திரம்:

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

காயத்ரி மந்திரத்தின் விளக்கம்

பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.