தென் மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரள்வதால் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு மாநிலங்களை எம்.பி எம்.எம்.அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
‘வைகாசி விசாகம்’ பண்டிகையை முன்னிட்டு
இது குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
தமிழகத்தில் உள்ள பழநி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோயில்களில் நடைபெறும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுகிறது. இதற்காக பக்தர்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். பெரும்பாலும் மக்கள் பொதுபோக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர்.
ஆகையால், பழநி வழியாக மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்செந்தூர் வழியாக பழநியில் இருந்து திண்டுக்கல், திருச்செந்தூர் வழியாக செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.
- காரைக்குடி-பழனி இடையே புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் வழியாக
- திருச்சி-திருச்செந்தூர் இடையே புதுக்கோட்டை, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக சிறப்பு இரயில்கள் இயக்கிட வேண்டி தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு இன்று நமது பாராளுமன்ற உறுப்பினர் திரு.M.M.அப்துல்லா அவர்கள் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், பழநி வழியாக செங்கோட்டையில் இருந்து மதுரை, சிறப்பு ரயில் இயக்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.