தென்னக ரயில்வே மதுரைக்கோட்டத்தில் 30 ரயில் நிலையங்களில் அந்தந்த பகுதிகளில் பிரபலமான பொருள்களான காராச்சேவு, பஞ்சாமிர்தம்,பலாப்பழம் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்ய உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு: மதுரைக் கோட்டத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ் மதுரை, திருநெல்வேலி போன்ற ரயில் நிலையங்க ளில் சுங்குடி சேலை மற்றும் பனைப் பொருள்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மதுரை ரயில் நிலையத்தில் தற்ப்போது சுங்குடி சேலை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மதுரைக் கோட்டத்தில் 30 ரயில் நிலையங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான பொருள் களை விற்பதற்கு விருப்ப மனு கோரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள், தூத்துக்குடி மற்றும் வாஞ்சி மணியாச்சியில் மக்ரூன், ராமேசுவரத்தில்கடல்பாசிபொருள்கள், கோவில்பட்டியில்கடலை மிட்டாய், விருதுநகர் மற்றும் சாத்தூரில் காராச்சேவு, தென்காசி மற் றும் செங்கோட்டையில் மூங்கில் பொருள்கள், ராமநாதபுரத்தில் கருவாடு, திருச்செந்தூரில் பனைப் பொருள்கள், காரைக்குடியில் ஆத்தங்குடி டைல்ஸ், பழனியில் பஞ்சாமிர்தம், பரமக்குடியில் மிளகாய் வத்தல், ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள், சங்கரன்கோவி லில் மாம்பழம் போன்ற விவசாயப் பொருள்கள், சிவகாசியில் டைரி கள், நோட்டு புத்தகங்கள், மானாமதுரையில் மண்பாண்ட பொருள்கள், புதுக்கோட்டையில் பலாப்பழம்,சிவகங்கையில் செட்டிநாடு கொட்டான்,ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா, கொடைரோட்டில் பன்னீர் திராட்சை, திருமங்கலத்தில் கைலிகள்,ஒட்டன்சத்திரத்தில் வெண்ணை,அம்பாசமுத்திரத்தில் பத்தமடை கோரைப்பாய்,மணப்பாறையில் முறுக்கு, புனலூரில் மிளகு,கொட்டாரகராவில் முந்திரி ஆகியவை விற்பனை செய்வதற்கு விருப்பமனு கோரப்பட்டுள்ளது.
விருப்ப மனுவை www.sr.indianrailways.gov.in என்ற இணை யதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய் யப்பட்ட விருப்ப மனுக்களை ஜூன் 5ஆம் தேதி மாலை 3 மணி வரை மதுரைக் கோட்ட அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க லாம் அல்லது srdcm@mdu.railnet.gov.in என்ற இணையதள முக வரிக்கும் அனுப்பலாம். குறிப்பிட்டரயில் நிலையங்களில் 15 நாள்க ளுக்கு எந்த கட்டணமும் செலுத்தாமல் நிலையத்தின் முக்கிய பகுதி யில் இந்த உள்ளூர் பொருள்களை விற்றுக் கொள்ளலாம்.

பதிவு பெற்ற சுயஉதவிக் குழுக்கள் மற்றும் அரசு அனுமதியு டன் பொருள்கள் தயாரிக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 90038-62967 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு பலாப்பழம்!
“One Station One Product” திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் #பலாப்பழம் விற்பனை செய்ய மதுரைக்கோட்டம் அழைப்புவிடுத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் வடகாடு, ஆலங்குடி பகுதிகளில் விளையும் பலாப்பழங்கள் இந்தியாவின் பிற மாநிலங்கள் மட்டுமல்லாது உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது மதுரை கோட்டம் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் பலாப்பழம் விற்பனையகம் அமைத்து விற்பனை செய்ய அழைப்பு விடுதிருப்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையும் பலாப்பழங்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்றே கூறவேண்டும்.

கடைசி தேதி: 05/06/22 (10:00 AM – 03:00 PM)
விண்ணப்பிக்கவேண்டிய இடம்: புதுக்கோட்டை ரயில்நிலைய Station Master அலுவலகம்