மீண்டும் பள்ளிக்குப் போகலாம்…
பள்ளிக்கூடங்கள் என்பவை வெறும் கட்டடமல்ல; நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்கவே முடியாத பசுமையான நினைவுகளைச் சுமந்து நிற்பவை நாம் படித்த பள்ளிக்கூடங்களே. நம் வாழ்வின் மறக்கவே முடியாத அறிவுக்கோவில்களாக விளங்கும் பள்ளிக்கூடங்களுக்கு நாம் மீண்டும் போகலாம்… வாருங்கள். 1952 தொடங்கி 2022 வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றாக கூடலாம். நம் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வோம். நம் பள்ளிக்கான தேவைகளில் நம்மால் இயன்றதைச் செய்யலாம். இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் வாருங்களேன்..!
நாள்: 2023 பிப்ரவரி – 4. சனிக்கிழமை – காலை 9 மணி.
பள்ளி வளாகம், அரசு மேல்நிலைப்பள்ளி, திருக்கோகர்ணம்.